×

வேகம் எடுக்கும் ஒமிக்ரான்: ஒரே நாளில் 377 பேருக்கு தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 3,007 ஆக அதிகரிப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை

டெல்லி: நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு 3,007 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 377 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று கேரளாவில் புதிதாக 50 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதுவரை ஒமிக்ரான் பாதிப்பால் இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 876 பேர், தலைநகர் டெல்லியில் 465 பேர்,கர்நாடகாவில் 333 பேர், ராஜஸ்தானில் 291 பேர், கேரளத்தில் 284 பேர், குஜராத்தில் 204 பேர், தமிழ்நாட்டில் 121 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஹரியானாவில் 114 பேர், தெலுங்கானாவில் 107 பேர், ஓடிசாவில் 60 பேர், உ.பி.யில் 31 பேர், ஆந்திராவில் 28 பேர், மேற்கு வங்கத்தில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல்  கோவாவில் 19 பேருக்கும், அசாமில் 9 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், உத்தரகாண்டில் 8 பேருக்கும், மேகாலயாவில் 4 பேருக்கும், சண்டிகரில் 3 பேருக்கும், ஜம்முவில் 3 பேருக்கும், அந்தமானில் 2 பேருக்கும்,  பாண்டிசேரியில் 2 பேருக்கும், பஞ்சாப்பில் 2 பேருக்கும், ஹிமாச்சல், லடாக், சத்தீஸ்கர், மணிப்பூரில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 3,71,363 பேர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 30,836 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புத்தாண்டிற்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்குடன் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.  கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. பீகார் மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது, அதேபோல் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது….

The post வேகம் எடுக்கும் ஒமிக்ரான்: ஒரே நாளில் 377 பேருக்கு தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 3,007 ஆக அதிகரிப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Health Department ,Delhi ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...